Skip to main content

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல் வெளியீடு


         டிஎன் பிஎஸ்சி நடத்திய சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தெரிவு பட்டியல்  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
             டிஎன்பிஎஸ்சி தொகுதி 6ல் அடங்கிய 80 வனச்சர கர் காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி
வரை நடந்த போட்டி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012 ஆகஸ்ட் மாதம் 22ம்மற்றும் 23ம் தேதிகளில் நேர்காணல் நடந்தது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அந்த பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
          அதேபோல, மீன்வளச் சார்நிலைப் பணியில் அடங்கிய 24 மீன் வள சார் ஆய்வாளர்  பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு நடந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4ம் தேதி நேர்காணல் நடந்தது. மேலும், பொது சார்நிலைப் பணியில் அடங்கிய 25 பஞ்ச் ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நேர்காணல் நடந்தது. இந்த தேர்வுகளில் தகுதியுடையோர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு