Skip to main content

‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த உத்தரவு


       ’மத்திய அரசின் ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்கள் இன்று முதல் செயல்படுத்த வேண்டும்’ என அனைத்து பல்கலைகள், கல்லூரிகளுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அறிவுறுத்தி
உள்ளது.

      பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவின் போது, ’ஸ்வச்சா பாரத் அபியான்’ என்ற ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். த்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் இத்திட்டத்தை கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தும்படி தெரிவித்துள்ளார்.

        இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம்: இத்திட்டத்தை அக்., 2ம் தேதி துவக்க வேண்டும்; பொது சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் விவாதம், கட்டுரைப் போட்டி, புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தெருக்களை சுத்தப்படுத்துவதுடன், பொது சுகாதாரம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதப்படி, உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என, யு.ஜி.சி.,யும் அறிவுறுத்தி உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு