Skip to main content

‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த உத்தரவு


       ’மத்திய அரசின் ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்கள் இன்று முதல் செயல்படுத்த வேண்டும்’ என அனைத்து பல்கலைகள், கல்லூரிகளுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அறிவுறுத்தி
உள்ளது.

      பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவின் போது, ’ஸ்வச்சா பாரத் அபியான்’ என்ற ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். த்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் இத்திட்டத்தை கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தும்படி தெரிவித்துள்ளார்.

        இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம்: இத்திட்டத்தை அக்., 2ம் தேதி துவக்க வேண்டும்; பொது சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் விவாதம், கட்டுரைப் போட்டி, புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தெருக்களை சுத்தப்படுத்துவதுடன், பொது சுகாதாரம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதப்படி, உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என, யு.ஜி.சி.,யும் அறிவுறுத்தி உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா