Skip to main content

இன்று உலக கடல்சார் தினம்

இன்று உலக கடல்சார் தினம் -- கடல் - பூமியின் உடல்
கடல்சார் துறையை மேம்படுத்துவது; கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது; கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி, உலக கடல்சார் நிறுவனத்தால் செப்.,25ம் தேதி உலக கடல்சார்
தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடல்சார் குற்றங்களை தடுத்து நிறுத்துவது; பாதுகாப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றில் சர்வதேச நாடுகளை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம்.

கப்பலுக்கு பாதுகாப்பளிப்பது; கடற்கொள்ளையர்களிடமிருந்து பிணைய கைதிகளை விடுதலை செய்வது; அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை இத்தினம் வலியுறுத்துகிறது. 

மிதக்கும் பயணம் "கடல் வழி' கொள்ளைகள், கடத்தல்கள் சர்வதேச சமூகத்துக்கு சவாலாக விளங்குகின்றன. இதனால் பொருள் மற்றும் உயிர் இழப்புகளை உலக நாடுகள் சந்திக்கின்றன. உலக பொருளாதார வளர்ச்சியில், கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் எரிசக்தி, இரும்பு, உணவுப் பொருட்கள், தொழிற்சாலை தயாரிப்புகள் உள்ளிட்ட பல சரக்கு போக்குவரத்துகள் கப்பல் மூலமே நடக்கிறது. தற்போதைய சூழலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பது, உலக நாடுகள் முன் உள்ள சவாலாக இருக்கிறது.கப்பல் போக்குவரத்தால் வியாபாரம் நடந்தாலும், அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். கடல் வளத்தை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம் என உலக கடல்சார் நிறுவனம் வலியுறுத்துகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு