Skip to main content

புதிய கல்விக்கொள்கை உருவாக்கம் செயல்பாட்டில் உள்ளது: ஸ்மிருதி இரானி


           அகடமிக் மெரிட் அடிப்படையிலான புதிய கல்விக் கொள்கை மற்றும் எந்தப் படிப்பு எந்த முறையில் கற்றுத்தரப்பட வேண்டும் என்பது குறித்தான கொள்கை உருவாக்கம் தற்போது செயல்பாட்டில் உள்ளதென்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

             இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை குறித்தான கலந்துரையாடல், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும்
மேற்கொள்ளப்படும். வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கொண்டு, புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆழ்ந்த விவாதம் நாடெங்கிலும் நடைபெறும் வகையிலான நிலையை எட்ட, நாங்கள் முயன்று வருகிறோம்.

எந்தப் படிப்பு, எந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனைத்து தரப்பிலிருந்து வரும் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்படும், என்றார்.

மேலும், நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைக் குறித்து கேட்டபோது, "கடந்த 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட கல்விக்கொள்கையின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக மானியக்குழு(UGC) செயல்பட்டு வருகிறது.

அந்தக் கொள்கைதான், 10+2+3 என்ற கல்வி அமைப்பை ஏற்படுத்தியது. சர்வ சிக்சா அபியான்(SSA) மற்றும் RTE தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

நான் அமைச்சராக பதவியேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், பல மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தபோது, அவர்கள், மேற்கண்ட விஷயங்களில் மதிப்பாய்வை கோரினார்கள்.

மேலும், மாநில கல்வித்துறை செயலாளர்களும், இதுதொடர்பான மதிப்பாய்வை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அப்பணி விரைவில் தொடங்கும்" என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு