Skip to main content

அரசு ஊழியர்களுக்கான வருமானவரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமானவரி பிடித்தம் தொடர்பாக அரசு விளக்கம் அளித்துள்ளது.


வரிக்கணக்கில் சேரவேண்டும்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வருமான வரி பிடித்தம் தொடர்பாக 25.10.13 தேதியிட்ட நிதித்துறை அரசாணையில் அனுப்பப்பட்ட மத்திய அரசு சுற்றறிக்கையின்படி, மாத ஊதியம் பெறும் அரசுப் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம்
செய்யப்படும் வருமான வரித் தொகை (டி.டி.எஸ்.) ஒவ்வொரு மாதமும் அந்தந்த துறைகளைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் டி.ஏ.என். எண்ணை பயன்படுத்தி சம்பளக் கணக்கு அலுவலகங்கள், கருவூலங்கள் மூலம் 24ஜி படிவத்தில் அலுவலகத்தின் அனைத்துப் பணியாளர்களின் வருமானவரி பிடித்தத்தின் மொத்தத் தொகை தாக்கல் செய்யப்பட்டு, வருமான வரிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு காலாண்டிலும்
சம்பளக் கணக்கு அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு, ஒவ்வொரு பணியாளரிடமிருந்து வருமான வரி பிடித்தம் செய்த தொகையை அறிய வாய்ப்பில்லை. தனிப்பட்ட பணியாளரின் வருமான வரி பிடித்தம், அந்தந்த துறையைச் சார்ந்த ஊதியம் வழங்கும் அலுவலர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது.

கருவூலத்தால் ஒவ்வொரு மாதமும் படிவம் 24ஜி–ல் தாக்கல் செய்யப்படுவது ஒரு புத்தக சரிக்கட்டல் என்ற முறையாகும். பிடிக்கப்பட்ட வருமான வரி கருவூலத்தில் இருப்பு வைக்கப்படுவதில்லை. இதற்குரிய புத்தக அடையாள எண்ணை (பி.ஐ.என்.) கருவூலங்களிலிருந்து பெற்று, தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி தொகைக்கான 24கியூ படிவத்தை வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் டி.ஐ.என். மையம் மூலம் ஒவ்வொரு காலாண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

சேர்க்கப்படாமல் இருக்கலாம்
மேலும், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி, சம்பந்தப்பட்ட பணியாளர்களது கணக்கில் சேர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறையைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கடமையாகும். அவ்வாறு பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஒவ்வொரு காலாண்டும் முறையாக உரிய காலக்கெடுவுக்குள் 24கியூ படிவத்தை தாக்கல் செய்யும் பட்சத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி அந்தந்த பணியாளர்களின் கணக்கில் விடுபடாமல் சேர்ந்துவிடும்.

இப்பணிகளை முறையாக செய்வதற்கு உரிய அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஊதியம் வழங்கும் அலுவலர்கள் முறையாக ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24கியூ தாக்கல் செய்யாதது அல்லது கருவூலத்தால் தாக்கல் செய்யப்படும் படிவம் 24ஜியை சரிபார்க்காமல் படிவம் 24கியூ வினை தாக்கல் செய்ததாலும் பணியாளர்களின் வருமான வரி கணக்கில் சேர்க்கப்படாமல் இருக்கலாம்.

திருத்திய படிவம் தாக்கல்
அவ்வாறு பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையென்று வருமான வரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர், அந்தந்த துறையைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலரைத் தொடர்பு கொண்டு திருத்திய 24கியூ படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். மேலும் இதன்மூலம் அபராதத்தைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு