Skip to main content

பாஸ்போர்ட் , பர்ஸ் அபேஸ் ஆனாலும் கார் வழியில் ரிப்பேர் ஆனாலும் உதவி காத்திருக்கு!


வெளிநாட்டிற்கோ, வெளிமாநிலத்திற்கோ சுற்றுலா செல்கிறீர்கள். சென்ற இடத்தில் உங்களுடைய பர்ஸ், போன், சூட்கேஸ் முதலானவை களவாடப்படுகிறது. ஹோட்டல் பில் கட்ட வேண்டும், ஊருக்குத் திரும்ப வரவேண்டும். கையில் பணமில்லை, பாஸ்போர்ட் இல்லை, உதவி கேட்கவும் ஆள் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?


ஹைவேயில் உங்களுடைய கார் பழுதாகி நின்றுவிடுகிறது. உதவிக்கு யாரை
அழைப்பீர்கள்? பத்து பதினைந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் இருக்கிற உங்களுடைய பர்ஸ் திருடப்படுகிறது.  உடனடியாக உங்கள் வங்கிகளுக்குத் தொடர்புகொண்டு பத்து கார்டுகளையும் டீஆக்டிவேட் செய்யவேண்டும்.

உங்கள் கணக்கிலிருந்து பணம் களவாடப்படுவதை உடனடியாக தடுக்கவேண்டும். எப்படிச் செய்வது? செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக சிம்கார்டை லாக் செய்து, காவல்துறைக்குப் புகார் கொடுக்க வேண்டும். எப்படி?

இதுமாதிரி நெருக்கடியான நேரங்களில் அவசரமாய் உதவும் நோக்கத்தில்தான், இகக என்கிற நிறுவனம் புதியவகை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏறக்குறைய இன்சூரன்ஸ் பாலிஸியைப் போலவேதான் இந்தச் சேவை செயல்படுகிறது. ஐரோப்பிய நிறுவனமான சிபிபி, இந்தியாவிலும் தன்னுடைய இவ்வகைச் சேவையைத் தொடங்கியுள்ளது. கார்டு புரொடக்டர், இதுதான் இந்தச் சேவையின் பெயர்.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு தொகையை இந்த நிறுவனத்தில் செலுத்திவிட்டால் போதும். மேலே குறிப்பிட்ட அசம்பாவிதங்கள் நேரும்போது முதலுதவி போல முன்னால் வந்து உதவும் இந்த நிறுவனம். எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் 1,400 ரூபாய் கட்டிவிடவேண்டும் (இன்சூரஸ் கட்டணம்போல). கூடவே உங்களைப் பற்றிய விவரங்களும் கிரெடிட் கார்டு தொடங்கி, பான் கார்டு வரை தொலைந்துபோனால் உடனடியாக மீட்கவும் டிஆக்டிவேட் செய்ய வேண்டியவற்றையும் குறித்த விவரங்களையும் கொடுக்கவேண்டும்.

அதற்குப் பிறகு எப்போதாவது அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால், சிபிபியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் உங்களுடைய கிரெடிட், டெபிட் கார்டுகள், இன்னபிற கார்டுகள் வங்கிக் கணக்குகளை இந்த நிறுவனம் உங்களுடைய வேண்டுகோளின் பேரில் முடக்கும். உதவி தேவைப்பட்டால் ஆளே வந்து நிற்பார்.

பர்ஸ் திருடப்பட்டு பணத்தை இழந்து, ஹோட்டல் பில் கட்டவோ, பயணத்திற்கோ பணமின்றித் தவிக்கும்போது ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சம் வரை பணம் கொடுத்து உதவுகிறார்கள் (28 நாட்களுக்குள் பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும்). உலகம் முழுக்க இந்த உதவிகள் கிடைப்பதுதான் இதில் ஆச்சரியமே.

ஒருவேளை எங்காவது ஆள் இல்லா சாலையில் உங்கள் வாகனம் பழுதாகி நின்றுவிட்டாலும் கூட உடனடி உதவிக்கு ஆள் அனுப்பியோ அல்லது அச்சாலை வழியே வருகிற மற்ற வாகனங்கள்வழி பாதுகாப்பாக வீடு வந்து சேரவோ இந்நிறுவனம் ஏற்பாடு செய்து தரும்.

இச்சேவை பற்றிய மேலதிக விவரங்களுக்கு http://india.cppdirect.com  என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு