Skip to main content

பள்ளிகளில் புரியாத பாடங்களை அனிமேஷன் படங்கள் மூலம் புரியவைக்கும் முயற்சி!


அல்ஜீப்ரா, அணு அமைப்பு மற்றும் இலக்கணம் உள்ளிட்ட பாடங்களை, மாணவர்களுக்கு புரியும்படி விளக்கும் வகையில், அனிமேஷன் படங்களை, தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது: அறிவியல், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றிலுள்ள கடினமான பகுதிகளை, மாணவர்கள் எளிதில்
புரிந்துகொள்ளும் படியாக, அனிமேஷன் படங்களாக மாற்றுவதற்கு, தொழில்நுட்பத் திறன்வாய்ந்த 120 ஆசிரியர்களை, தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள், டிஜிட்டல் நூலகத்தில், ஆதார வளங்கள் மற்றும் அனிமேஷன் படங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இதிலிருந்து, பிற ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வகுப்பறையில் பயன்படுத்துவார்கள்.

பாடத்தின் கடினமான பகுதிகளை, அனிமேஷன் மூலமாக விளக்கும்போது, பள்ளி மாணவர்களின் ஆர்வம் இயல்பிலேயே அதிகரித்து, அவர்கள் தங்களின் பாடப் பகுதிகளை எளிதாக புரிந்து கொள்வார்கள்.

காந்தப் புலங்கள், அல்ஜீப்ரா, மேட்ரிக்ஸ் உள்ளிட்ட பலவிதமான பாடப் பகுதிகள் அனிமேஷன் முறையில் மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம், அல்ஜீப்ரா என்பது புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்று என்ற கருத்து உடைபடும்.

ஆசிரியர்களால் உருவாக்கப்படும் அனிமேஷன் அம்சங்கள், Educational Content Server என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த ஆண்டில் மட்டும், டிஜிட்டல் நூலகத்திற்காக 10 ஆயிரம் உள்ளடக்கங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு