Skip to main content

அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்

அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் - கீழ்கண்ட வகைகளில் கொண்டாடுமாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையினை உருவாக்குவதற்கும் மாணவர்கள் அன்புடனும், ஆதரவுடனும் கொடுத்து உதவும் மனப்பாங்குடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து பரிசுகளையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் அக்டோபர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் ‘ மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் ‘ கீழ்கண்ட வகைகளில் கொண்டாடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எழுத படிக்கத்தெரியாதவர்களுக்கு உதவலாம்

1. மாணவர்கள் தங்களின் மனதை கவர்ந்த ஆசிரியர்களின் பணியினை பாராட்டி நன்றி பெருக்கோடு சிறு கட்டுரை வரையலாம்.

2. மாணவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் வாழும் இயலாதோர்களுக்கு இயன்ற பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம்.

3. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்றிட உதவலாம்.

5. பயன்தரும் செய்திகளை, படித்தவர்கள் அதனை படிக்காத நண்பர்களும் படித்திட செய்திடலாம்.

6. மாணவர்கள், அரிய நிகழ்ச்சிகள் குறித்து பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதிடச் செய்திடலாம்.

7. மாணவர்கள் தனது சுய முயற்சியில் ஏதாவது ஒரு கைவினைப்பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கிட செய்யலாம்.

8. பயணத்தின் போது மற்றவர்களுக்கு தாம் அமர்ந்து இருக்கும் இருக்கையினை கொடுத்து உதவிடலாம்.

9. பெரியோர்களிடம் தங்களது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களை கலந்துரையாடலாம்.

சாலையை கடக்க உதவவேண்டும்

10. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலையினை கடப்பதற்கு உதவி செய்யலாம். உதவி செய்வது நல்லது.

11. அருகாமையில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

12. போக்குவரத்து காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித உறை

13. பாலிதீன் பைகளின் பயன்பாட்டினை குறைப்பதற்கு பழைய காகிதங்களை கொண்டு உறைகள் (கவர்கள்) செய்யலாம்.

14. சின்ன சின்ன பரிசுப் பொருட்களை அருகாமை வீட்டார்களுக்கு கொடுத்து மகிழலாம்.

15. சிறந்த பத்து பொன்மொழிகளை எழுதி பொது இடங்களில் பார்வைக்கு வைக்கலாம்

16. தங்களுக்கு தெரியாத புதிய ஐந்து நபர்களுக்கு புன்னகையுடன் வாழ்த்துச் சொல்லலாம்.

17. முதியவர்களுக்கு தினசரி நாளிதழ்களை வாசித்துக் காட்டலாம்.

18. தங்களது பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு