Skip to main content

ஐ.ஐ.டி., கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி மதிப்பெண்ணில் தளர்வு

ஐ.ஐ.டி., கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி மதிப்பெண்ணில் தளர்வு :பிளஸ் 2வில் 75 சதவீதம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்
ஐ.ஐ.டி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், பிளஸ் 2 தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றவர்களையும் பங்கேற்க அனுமதிக்கலாம்' என, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த, ஐ.ஐ.டி.,க்களுக்கான கவுன்சில் கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கவுன்சில் கூட்டம்நாடு முழுவதும் உள்ள, ஐ.ஐ.டி.,க் களுக்கான கவுன்சிலின், 48வது கூட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில், நேற்று நடந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிதலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துறை செயலர் அசோக் தாக்கூர், 16 ஐ.ஐ.டி.,க்களின் தலைவர், மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.கூட்ட முடிவில், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அசோக் தாக்கூர் கூறியதாவது:
ஐ.ஐ.டி.,க்களின் பழைய மாணவர்கள் சங்கம், பெங்களூரில் அமைக்கப்படுகிறது; இதற்கு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில், 20 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்கும் நிலை இருந்தது.
தற்போது, பிளஸ் 2வில், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி மதிப்பெண் தளர்விற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது, பொதுப்பிரிவினர், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 75 சதவீதமாகவும், எஸ்சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 70 சதவீதமாகவும் இருக்கும்.
கடந்த முறை, 200 மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு, ஒப்புதல் வழங்கப்பட்டு 
உள்ளது.இந்திய அளவில், கல்வி நிறுவனங் களின், 'தரவரிசை பட்டியல்' தயாரிப்பு குறித்த வரைவுத்திட்டத்தை, ஐ.ஐ.டி.,க்கள் தயாரிக்கின்றன. அதன் பின், மத்திய பல்கலைகளுக்கு இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.
தொடர்ந்து, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) மானியத்தை பெறும், பல்கலைகள், கல்லுாரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுகுறித்த, மாதிரி திட்ட அறிக்கை, டிசம்பரில் தயாராகிவிடும்.மார்ச்சில் வரைவு திட்டம்இறுதி வரைவுத்திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தயாராகி விடும்.இது இந்திய கல்வி நிறுவனங்களுக்கானது மட்டுமே. இத்திட்டத்திற்கான ஒருங்கமைப்பு குழுவில், கான்பூர் மற்றும் சென்னை ஐ.ஐ,டி.,க்கள் முக்கிய இடம் வகிக்கும்.
ஆக., 15ம் தேதி, 'ஸ்வச் பாரத் அபியான்' எனும் திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி, பள்ளிகள் மட்டுமின்றி, கல்லுாரி, பல்கலைகளிலும், சுகாதாரம் பேணும் திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு