Skip to main content

மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகள்: மாநகராட்சி சார்பில் இலவசப் பயிற்சி


மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி
ஞாயிற்றுக்கிழமை (செப்.28) தொடங்கிவைக்கவுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்புகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.

இந்தப் பயிற்சிகள் சைதாப்பேட்டை, பந்தர் கார்டன் ஆகிய மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை செனாய் நகர் மாநகராட்சி கலையரங்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே விண்ணப்பம் அனுப்பியவர்கள் தவிர இதுவரை விண்ணப்பம் அனுப்பாதவர்களும் பயிற்சியில் நேரடியாகச் சேரலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.