Skip to main content

அரசு பள்ளிகளின் பலநாள் கனவு! 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க தீவிரம்


மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளின் பலநாள் கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 உட்பட அறிவியல் பாடங்களுக்கான
செய்முறை வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துவதற்கு ஆய்வக உதவியாளர்கள் பணி மிக முக்கியம். ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்களை பராமரிப்பது இவர்களின் பொறுப்பு. இப்பணியிடங்கள் பல பள்ளிகளில் காலியாக இருந்ததால் ஆய்வகங்கள் சரிவர பராமரிப்பின்றி பெயரளவில் உள்ளன.அரசு பள்ளிகளில் இப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டன. இதன் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் 93 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில், பதிவறை எழுத்தர், அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு மூலம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 67 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், இதற்கான பதிவு மூப்பு பட்டியலை கல்வித்துறை கோரியுள்ளது. பட்டியல் கிடைத்ததும் மீதமுள்ள 67 இடங்கள் நிரப்பப்படும்.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "பதவி உயர்வு அடிப்படையில் மேலுார் கல்வி மாவட்டத்தில் 9, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 5, மேலுார் கல்வி மாவட்டத்தில் 12 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 67 பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு