Skip to main content

மலைவாழ் மக்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிப்பு: 7ம் வகுப்பு மாணவர் சாதனை



மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவர் ச. தினேஷ்குமார், புதிய கண்டுபிடிப்புக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது
பெற்றார்.

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் பங்கேற்ற இம்மாணவர், மலைவாழ் மக்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனத்தை செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து, இந்த விருதை பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள், மாணவருக்கு இந்த விருதை வெள்ளிப் பதக்கத்துடன் வழங்கினார். மாநில அளவில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பெற்ற மாணவர் தினேஷ்குமாரை, மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூவேந்திரன், ஜான்கென்னடி அலெக்சாண்டர், தலைமை ஆசிரியர் பாலநாகம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கிராம கல்வி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு