Skip to main content

இந்திய ரயில்வேயில் 6101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது. 
உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் 20.09.2014 முதல் 19.10.2014 வரை
விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:6101.

வயது:

01.01.2015 அன்று, ஜூனியர் இன்ஜினீயர் பணிக்கு 18-33 வயதுக்குள்ளும், சீனியர் இன்ஜினீயர் பணிக்கு 20-35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வித் தகுதி:

அறிவிக்கையில் வெளியான அட்டவணையில் உள்ள பணிகளுக்கு உரிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினீயரிங்கில் பட்டயப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களும் அறிவிக்கையில் வெளியாகியுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் அதாவது ரூ.50,000க்கு குறைவான ஆண்டுவருமானம் கொண்டோர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிறர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ வங்கி செலான் மூலமாகவோ அஞ்சலகத்திலோ செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜூனியர்இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 14.12.2014 அன்றும் சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 21.12.2014 அன்றும்நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய தகுதியுடையோர் ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கோ சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கோ ஏதாவது ஒரு ஆர்ஆர்பி இணையதளத்தில் (http://www.rrbald.gov.in/ ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட்டை ஆர்ஆர்பி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை. எழுத்துத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆல்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்:
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2014.

கூடுதல் விவரங்களுக்கு:http://www.rrbald.nic.in/

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா