Skip to main content

5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்?

5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்? தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க  வழங்கப்பட்ட 5%  மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி)
வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்

இந்த தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு பெற்று அரசு வேலைக்கு சென்றிருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அரசு 5% மதிப்பெண் தளர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கியதை ரத்து செய்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக இதனை உடனடியாக அரசு மேல்முறையீடு செய்யும் இல்லை என்றால் எதிர்கட்சிகள் மற்றம் சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் முறையீடு செய்ய வில்லை என கேள்வி கேட்பார்கள். மேலும் தற்போது பணியில் சேர்நதுள்ளவர்களுக்கு தடைவிதிக்கும் படி நீதிமன்றத்தில் தேர்வு பெறதவர்கள் வழக்கு தொடுக்கலாம். இவை தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். அதைவிட பெரியது ஒன்று உள்ளது நமது தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் பெற்று தந்துவிடுவார் ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன் அறிவித்து பிறகு இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால் அது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதாக அனைவரும் நினைத்து விடுவார்கள் என தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்வார்கள் இது உறுதி

   ஜெயா டிவியில் இதுவரை செய்தியில் இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து எந்த செய்தியும் வரவில்லை எனவே இந்த தீர்ப்பு குறித்து கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் மற்ற மாநிலங்களில் இந்த தளர்வு கொடுத்ததை கோடிட்டு காட்டி அரசின் கொள்கை என கூறி அரசானைக்கு உயிர் கொடுப்பார்கள் என தெரிகிறது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன