Skip to main content

49 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு


அரசுப் பள்ளிகளின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக்
பள்ளிகள் ஆய்வாளர் என 120-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இருந்த தலைமையாசிரியர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சியும் வழங்கப்பட்டது.

ஆனால், தலைமையாசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஆவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

1. கே.பாஸ்கர் ராவ்    அரசு உயர்நிலைப் பள்ளி, முருக்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம்    மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை.

2. எம்.ஜி. கந்தசாமி    (அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்)    மாவட்டக் கல்வி அலுவலர், தென் சென்னை.

3. ஆர்.சுரேஷாதேவி    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்    உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை.

4. தி.மலர்விழி    அரசு மேல்நிலைப் பள்ளி, சோமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்    மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்.

5. பி.ராஜகோபால்    அரசு உயர்நிலைப் பள்ளி, மாகாண்யம், காஞ்சிபுரம் மாவட்டம்    மாவட்டக் கல்வி அலுவலர், வடசென்னை.

6. பி.ஆர்.விஜயலட்சுமி    அரசு உயர்நிலைப் பள்ளி, ஏமப்பூர், விழுப்புரம் மாவட்டம்    மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்.

7. க.நாகராஜ்    மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்     மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு).

8. இ.அருள்பிரகாசம்    அரசு உயர்நிலைப் பள்ளி, சி.அரசூர் அஞ்சல், கடலூர் மாவட்டம்    மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.



ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு:

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த சொ.ரவி என்பவர் கடந்த மார்ச் மாதத்திலேயே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், பதவி உயர்வுப் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படாததால் அவருக்கு மாவட்டக் கல்வி அலுவலராக இப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.



பள்ளிக் கல்வித் துறை இந்த கவனக் குறைவைத் தவிர்த்திருக்கலாம் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு