Skip to main content

35 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பயிற்சி


அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம் குறித்த அடிப்படை பயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,பெரும்பாலான பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நோக்கில், 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்தே பாட வகுப்புகள்
எடுக்கப்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில், 9ம் வகுப்பு பாடபுத்தகங்களில் முக்கியமாக அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி: இப்பயிற்சி வகுப்பு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் மூலம், பாட ஆசிரியர்களுக்கு எடுக்கப்படும். அந்த பாட ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் அடிப்படை வாசிப்பு திறன், முக்கிய சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்த கல்வியை கற்றுத்தர வேண்டும். இப்பயிற்சி அக்.,முதல் வாரத்தில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாநில அளவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களில், 35 ஆயிரம் பேருக்கு வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அதிகாரி கூறுகையில், “ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இதை தொடர்ந்து, பிளஸ் ௧, பிளஸ் 2 முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது,” என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு