Skip to main content

35 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பயிற்சி


அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம் குறித்த அடிப்படை பயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,பெரும்பாலான பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நோக்கில், 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்தே பாட வகுப்புகள்
எடுக்கப்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில், 9ம் வகுப்பு பாடபுத்தகங்களில் முக்கியமாக அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி: இப்பயிற்சி வகுப்பு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் மூலம், பாட ஆசிரியர்களுக்கு எடுக்கப்படும். அந்த பாட ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் அடிப்படை வாசிப்பு திறன், முக்கிய சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்த கல்வியை கற்றுத்தர வேண்டும். இப்பயிற்சி அக்.,முதல் வாரத்தில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாநில அளவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களில், 35 ஆயிரம் பேருக்கு வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அதிகாரி கூறுகையில், “ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இதை தொடர்ந்து, பிளஸ் ௧, பிளஸ் 2 முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது,” என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா