Skip to main content

பிளஸ் 2 தனித்தேர்வு செப்.,25ல் துவக்கம்

"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு செப்., 25ல் தேர்வு துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:
தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஆக., 25 முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு செப்., 25ல் துவங்க உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும். செப்., 25 தமிழ் முதல்தாள்; செப்., 26 தமிழ் இரண்டாம் தாள்; செப்., 27 ஆங்கிலம் முதல்தாள்; செப்., 29 ஆங்கிலம் இரண்டாம் தாள்; செப்., 30 இயற்பியல், பொருளியல்; அக்., 1 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி; அக்., 4 வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவியியல்; அக்., 6 வேதியியல், அக்கவுன்டன்சி; அக்., 7 உயிரியியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்; அக்., 8 கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு தமிழ்; அக்., 9 பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்சிங். இவ்வாறு தேர்வுகள் நடக்கும் என, தெரிவித்து உள்ளார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு