தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள
அறிக்கை:
சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி மொழிபெயர்ப்புத் தாள், தாள் ஒன்று ஆகியவை நவம்பர் 1-ஆம் தேதியும், தாள்-2, தாள்-3 ஆகியவை நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசித் தேதி அக்டோபர் 3-ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 6-ஆம் தேதி என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் அக்டோபர் 18, 19 தேதிகளில் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.