Skip to main content

டிஎன்பிஎஸ்சி: சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு நவம்பர் 1-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள
அறிக்கை:

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி மொழிபெயர்ப்புத் தாள், தாள் ஒன்று ஆகியவை நவம்பர் 1-ஆம் தேதியும், தாள்-2, தாள்-3 ஆகியவை நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசித் தேதி அக்டோபர் 3-ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 6-ஆம் தேதி என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் அக்டோபர் 18, 19 தேதிகளில் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா