Skip to main content

UPSC : 'ஆங்கில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்'


'நாளை நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு, இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க தேவையில்லை' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாளை நடக்கும்,
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு தொடர்பாக, சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில், சில சட்ட திருத்தங்களை, மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பையும், மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் புதிய அறிவிப்பு வருமாறு:

24.8.14ல், முதல் மற்றும் இரண்டாம் தாள் என, சிவில் தேர்வு, முதல்நிலை தேர்வு நடக்கும்.
இரண்டாம் தாள் தேர்வு கேள்வித்தாளில், 10ம் வகுப்பு தரத்தில் இடம் பெற்றுள்ள ஆங்கில திறனறிதல் கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க வேண்டாம்.
இந்த கேள்விகள், 'கிரேடு' மற்றும் 'மெரிட்' பட்டியலுக்காக, மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
எனவே, தேர்வர்கள், ஆங்கில கேள்விகளை தொட தேவையில்லை. மேலும், ஆங்கில கேள்விகள், இந்தி வழி கேள்வித்தாளில் அச்சடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மொத்த மதிப்பெண்ணில், ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண், கழிக்கப்படும். எனவே, பிரதான தேர்வுக்கு (மெயின்) தகுதியான தேர்வர்களை தேர்வு செய்யும்போது, முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் போக, மீதியுள்ள மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு