Skip to main content

SSA - 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி



ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு பயிற்சி
வழங்கப்படுகிறது.
கணிதப் பாடத்தில் கடினப் பகுதிகளை மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக கற்பிப்பது, புதுமையான கற்பித்தல் முறைகள் போன்றவை இந்தப் பயிற்சியில் ஆசிரியர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், கணித வல்லுநர்கள் ஆகியோர் கருத்தாளர்களுக்கு திங்கள்கிழமை வகுப்புகளை எடுத்தனர்.

முதல்கட்டமாக மாநில அளவிலும், அடுத்ததாக, மாவட்ட அளவிலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பயிற்சி வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பயிற்சியால் பாதிப்பா?

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியால் பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் கூறினர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை இரண்டு, மூன்று குழுக்களாகப் பிரித்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது போன்ற பயிற்சிகளின் மூலமே புதுமையான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதோடு, தங்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கல்வித் தரம் மேம்பட இதுபோன்ற பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என அவர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு