Skip to main content

பாரதிதாசன் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு மையங்கள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 31-ம் தேதி எம்.எட். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தின் மூலம் முதுகலை கல்வியியல் (எம்.எட்) பட்டம் பயில விரும்புவோர்களிடமிருந்து 18,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை செய்து கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 65 பேர் மாற்றுத் திறனாளிகள்.

இப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மாநிலத்தில் 25 மையங்களில் ஆகஸ்ட் 31-ம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் அளித்த முகவரிக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு நடைபெறும் மையங்கள்: திருச்சி- ஜமால் முகமது கல்லூரி, சிறிமதி இந்திராகாந்தி கல்லூரி, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்- பாரத் அறிவியல் மேலாண்மைக் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி.மேலும் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் இத்தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வுமையங்களுக்கு தங்களின் புகைப்படத்துடன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 9 மணிக்குச் சென்று, அங்கு பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்களை அணுகி மாற்றுத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in என்ற பல்கலைக்கழக வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: 0431- 2407054, 2407027, 2407028.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா