Skip to main content

பாரதிதாசன் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு மையங்கள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 31-ம் தேதி எம்.எட். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தின் மூலம் முதுகலை கல்வியியல் (எம்.எட்) பட்டம் பயில விரும்புவோர்களிடமிருந்து 18,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை செய்து கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 65 பேர் மாற்றுத் திறனாளிகள்.

இப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மாநிலத்தில் 25 மையங்களில் ஆகஸ்ட் 31-ம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் அளித்த முகவரிக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு நடைபெறும் மையங்கள்: திருச்சி- ஜமால் முகமது கல்லூரி, சிறிமதி இந்திராகாந்தி கல்லூரி, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்- பாரத் அறிவியல் மேலாண்மைக் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி.மேலும் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் இத்தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வுமையங்களுக்கு தங்களின் புகைப்படத்துடன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 9 மணிக்குச் சென்று, அங்கு பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்களை அணுகி மாற்றுத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in என்ற பல்கலைக்கழக வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: 0431- 2407054, 2407027, 2407028.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு