Skip to main content

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சிறப்பு சலுகை


சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்
2 ஜி, 3 ஜி வாடிக்கை யாளர்களுக்கு 14 ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை 90 நாள்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளித்துள்ளது.

அதன்படி ரூ.100, ரூ.150, ரூ. 250 மற்றும் ரூ.350-க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது.

மேலும், ரூ. 550 மற்றும் ரூ.750- க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முறையே ரூ. 575, ரூ. 790-க்கான டாக் டைம் வழங்குகிறது.ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச கட்டணத்தை விட கூடுதல் டாக்டைம் வழங்கும் சி-டாப் அப் வவுச்சர்களுடைய டாக்டைம் அதிகமாக இருந்தால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அந்த கூடுதல் சலுகைக் கட்டணம் பொருந்தும்

ரூ.561 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 60 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 5 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். மேலும், கூடுதல் டேட்டாபயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும்.ரூ.821 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 7 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும். ரூ.1011 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. இலவசமாகப் பெறலாம்.மேலும், கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் ரூ.1949 சிறப்புக்கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஜி.பி. இலவசமாகப் பெறலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும். இந்த சிறப்பு சலுகை சென்னை உள்பட தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு