Skip to main content

ஆசிரியை நியமனம் ரத்து செல்லாது: ஐகோர்ட்

பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த, சிவகங்கை மாவட்டதுவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருப்பத்தூரை சேர்ந்தவர் கீதா. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இவரது பெயரை, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் கீதா பங்கேற்றார். அவர் பட்டதாரி ஆசிரியராக
கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2010 செப்.,7 ல் நியமிக்கப்பட்டார். இந்நியமனத்தை சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்விஅலுவலர் 2011 பிப்.,14 ல் ரத்து செய்தார். கீதா, 'தனக்கு எவ்வித நோட்டீசும் வழங்காமல், நியமனத்தை துவக்கக் கல்வி அலுவலர் ரத்து செய்துள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. துவக்கக் கல்வி அலுவலர், ''மனுதாரர் பெயர் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்திற்குரிய முன்னுரிமை பட்டியலில் இருந்தது. அவருக்கு திருமணமாகி விட்டது. இதனால், தனதுபெயரை முன்னுரிமை பட்டியலிலிருந்து நீக்குமாறு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மனுதாரர் தெரிவிக்கவில்லை.தேர்வு அலுவலர்களை மனுதாரர் ஏமாற்றும் நோக்கில் நடந்துகொண்டார். இதனால், அவர் முன்னுரிமை பிரிவில் உரிமை கோர முடியாது. எனவே, நியமனம் ரத்து செய்யப்பட்டது,'' என்றார்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)உறுப்பினர் செயலாளர், ''முன்னுரிமை பட்டியலின் கீழ் சலுகை பெற, வேலைவாய்ப்பு அலுலவகத்தில் மனுதாரர் பதிவு செய்யவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போதுதான், முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அவர் முன்னுரிமை பிரிவின் கீழ் நியமனம் பெற தகுதி இல்லை,'' என்றார்.

நீதிபதி:

டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலாளரின் பதில் ஏற்புடையதல்ல. அவரது மற்றும் துவக்கக் கல்வி அலுவலரின் பதிலில் முரண்பாடு உள்ளது. மனுதாரர் பொதுப்பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தைசேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். இதில் தவறில்லை. நியமனத்தை ரத்து செய்த உத்தரவு செல்லாது என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு