Skip to main content

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது

தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார்.
சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம்
ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப்பெற்றவர் அவர். தனக்கு கீழ் உள்ள படையினரை வழிநடத்துவதில் திறமை மிகுந்தவர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சோஃபியானில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கடுமையாக போரிட்ட அவர் நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், அவரது தியாகத்தை போற்றும் வகையில் மத்திய அரசு அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்க உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.