Skip to main content

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சாதனைக்கான பிரதமர் விருது


அரசு ஊழியர்களின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் விதமாக,
சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளின் பணியை ஊக்குவித்து
பாராட்டும் விதமாக, மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில், சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவன அடிப்படையிலோ, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த, 2013 14க்கான விருதுக்கு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள். அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்களை, நிர்வாக சீர்திருத்தத் துறை வரவேற்றுள்ளது.
விண்ணப்பங்களை, அக்டோபர், 17ம் தேதிக்குள், டில்லி, பார்லிமென்ட் தெரு, சர்தார் படேல் பவன், ஐந்தாவது தளத்தில் உள்ள, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறையின் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். இதற்கான மாதிரி படிவம் மற்றும் திட்டம் குறித்த இதர தகவல்கள், நிர்வாக சீர்திருத்தத் துறையின் இணையதளத்தை பார்த்து அறியலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு