Skip to main content

கிராம கல்விக் குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

தருமபுரி :தாற்காலிக அடிப்படையில் கிராம கல்விக் குழு கணக்காளர்கள்பணியிடத்துக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல்
முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட்டார வளமைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணியிடங்களில் 11 பேர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் ரூ.9,900 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் முதல் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பி.காம் கல்விச் சான்று, டாலி கணினி தகுதிச் சான்றுடன் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற செப்.1ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தகுதியானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்.13ஆம் தேதி நடைபெறும்என்றார் அவர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா