Skip to main content

கிராம கல்விக் குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

தருமபுரி :தாற்காலிக அடிப்படையில் கிராம கல்விக் குழு கணக்காளர்கள்பணியிடத்துக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல்
முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட்டார வளமைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணியிடங்களில் 11 பேர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் ரூ.9,900 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் முதல் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பி.காம் கல்விச் சான்று, டாலி கணினி தகுதிச் சான்றுடன் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற செப்.1ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தகுதியானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்.13ஆம் தேதி நடைபெறும்என்றார் அவர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு