Skip to main content

அரசு துறைகள் வழக்கு தொடர்வதை ஒடுக்க புதிய கொள்கை - அரசு முடிவு



புதுதில்லி, ஆக.25-அரசு துறைகளும் அலுவலகங்களும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வதை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய கொள்கை ஒன்றை கொண்டுவர பாஜக அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுதொடர்பாக, புதுதில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சட்டத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கவும் தேசிய வழக்கு தொடர்தல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இக்கொள்கையானது பல்வேறு மத்திய அமைச்சர்களும் துறைகளும் என்ன மாதிரியான வழக்குகளை தொடர்வது என்பதை வரையறுத்துக் கொள்ளவும், எந்த வழக்குகளை கிடப்பில் போடுவது என்பதையும் முடிவு செய்ய அரசு துறைகளுக்கு உதவும். இந்த கொள்கையானது நல்ல வழக்குகள் தொடர்ந்து நடத்தப்படவும் மோசமான வழக்குகளை கைவிடவும் உதவும்.

இக்கொள்கையானது கடந்த 2010 ஜூன் மாதம், தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டது. தற்போதைய அரசு சட்ட அமைச்சகம் இக் கொள்கையை விரைவில் வடிவாக்கம் செய்து அமல்படுத்த வேண்டும். இக்கொள்கையானது மத்திய அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் கலந்தாலோசனைக்கு அனுப்பப்படும். இதுகுறித்து கருத்துகள் பெறப்பட்ட பின்னர், கொள்கை இறுதி செய்யப்படும்.இக்கொள்கையின் மூலம் இறுதியில் எதையும் நீதிமன்றங்களே தீர்மானிக்கும் என்ற எளிமையான அணுகுமுறை நிராகரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, சட்ட அமைச்சகம் அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒருவர் மீது மற்றொருவர் வழக்குத் தொடரக் கூடாது என்று எச்சரிக்கை செய்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.அரசுத் துறைகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டால், முதலில் இரு தரப்பினரும் சட்ட அமைச்சகத்தை அணுக வேண்டும். சட்ட அமைச்சகத்தில் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாதபட்சத்தில், அமைச்சக செயலர் பிரச்சனையை தீர்த்துவைக்க கேட்டுக் கொள்ளலாம். பிரதமர் அலுவலகமே பிரச்சனையை தீர்ப்பதற்கான இறுதி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு