Skip to main content

பகுதி நேர ஆசிரியர்கள் காலியிடம் கணக்கெடுப்பு


அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு
பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில்
நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சம்பளம், எஸ்.எஸ்.ஏ., மூலம், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கிராம கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிப்பு, தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களையும், பகுதி நேர ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் காலியிடம் இருப்பின் அது குறித்த விபரங்களையும், அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா