Skip to main content

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தாற்காலிக கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையங்களில் தாற்காலிக கணக்காளர் பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்
தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்படும் வட்டார வளமையங்களில் கணக்காளர் பணியிடங்கள் தாற்காலிகமாக நிரப்பப்பட இருக்கிறது. இப்பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன், கணிப்பொறி(Tally) முடித்து தகுதிச் சான்று பெற்றிக்க வேண்டும். அதோடு, 1.8.2014 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் செப்-1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக அளிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் மட்டுமே ஆக.13-ம் தேதி நடைபெற இருக்கிற எழுத்துத் தேர்வுக்கு கடிதம் மூலம் அழைக்கப்படுவார்கள். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அந்தந்த வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் நிலையான பயணப்படி உள்பட மாதந்தோறும் ரூ.9900 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எனவே இப்பணிக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு