Skip to main content

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தாற்காலிக கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையங்களில் தாற்காலிக கணக்காளர் பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்
தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்படும் வட்டார வளமையங்களில் கணக்காளர் பணியிடங்கள் தாற்காலிகமாக நிரப்பப்பட இருக்கிறது. இப்பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன், கணிப்பொறி(Tally) முடித்து தகுதிச் சான்று பெற்றிக்க வேண்டும். அதோடு, 1.8.2014 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் செப்-1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக அளிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் மட்டுமே ஆக.13-ம் தேதி நடைபெற இருக்கிற எழுத்துத் தேர்வுக்கு கடிதம் மூலம் அழைக்கப்படுவார்கள். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அந்தந்த வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் நிலையான பயணப்படி உள்பட மாதந்தோறும் ரூ.9900 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எனவே இப்பணிக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா