Skip to main content

சத்துணவு ஊழியர்கள் மறியல் : விளக்கம் கேட்க உத்தரவு


கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களிடம் விளக்கம் கேட்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும் உணவை மேலும் தரமானதாக தயாரித்து வழங்கிட அரசு மானியத் தொகையை உயர்த்தி
வழங்கிடவும், 32 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவுஅமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், மறியலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு வழக்கம் போல் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யவும், துறைரீதியாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் சமூக நலத்துறையின் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.