Skip to main content

பட்டதாரிகளுக்கு புகையிலை வாரியத்தில் பல்வேறு பணி

ஆந்திர மாநிலம் குண்டூரில் செயல்பட்டு வரும் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: புள்ளியியல் அதிகாரி


காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: புள்ளியியல், கணிதம் போன்ற துறையில் முதுகலை பட்டம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாக கொண்டு வணிக பொருளியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அனுபவம்: 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.



பணி: கள ஆய்வாளர்/ தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.

வயது வரம்பு: 18  30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேளாண்மை துறையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: புகையிலை விவசாய பணியில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.



பணி: புள்ளியியல் உதவியாளர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.

தகுதி: புள்ளியியல் துறையில் பட்டம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: லோயர் டிவிசன் கிளார்க்

காலியிடங்கள் 11

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.



பணி: கள உதவியாளர்

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 முடித்து புகையிலை விவசாயப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: ஸ்டெனோகிராபர் நிலை - 2

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ..9,300 - 34,800

வயது வரம்பு: மாதம் 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.



பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (கிரேடு - பி)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் துறையில் டிப்ளமோ பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.



பணி: டிரைவர் (சாதாரண கிரேடு)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம்

பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24.08.2014 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Secretary, Tobacco Board என்ற பெயரில் Gunturல் மாற்றத்தக்க வகையில் டிடி.யாக செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary,

Tobacco Board,

Post Box.No: 322,

G.T. Road,

GUNTUR 522 004.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2014.



மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://tobaccoboard.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு