Skip to main content

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்ட வாரியாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் www.tndge.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 26-ஆம் தேதி வரை நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணம் ரூ.50 ஆகும்.

ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த மையங்களில் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை விண்ணப்பதாரர்கள் கவனமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணை வைத்தே தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும். ஏற்கெனவே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகலை எடுத்து வர வேண்டும். படிப்பை பாதியிலேயே நிறுத்திய தேர்வர்கள் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்றுச் சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

அறிவியல் பாடங்களில் தேர்வு எழுதுவோர் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.

இப்போது சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் அனைத்துத் தேர்வுகளும் நடைபெறுவதால், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை சிறப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு