Skip to main content

அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் அட்டவணை தயாரிக்க அரசு உத்தரவு.



அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் விபரங்களைசேகரிக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இயக்குநர் பிச்சை, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்கக இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


மெட்ரிக்குலேஷன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், குறைந்தபட்ச இடவசதி ஒரே அமைவிடத்தில் ஏற்படுத்தாத பள்ளிகள் சார்பில் இடவசதி சார்ந்த விதியை மாற்றியமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கீகாரமின்றி செயல் படும் பள்ளிகள் தொடர் பான விபரங்களை, அரசி டம் சமர்பிக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் தொடர்பான விபரங்களை படிவமாக வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.இந்த படிவத்தில் பள்ளியின் வகை, இன்றைய தேதி வரை அங்கீகாரம் பெற்ற மொத்த பள்ளிகள் எண்ணிக்கை, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எண்ணிக்கை, இடப்பற்றாக்குறை காரண மாக அங்கீகாரம் நிலுவை யில் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செயல்படுதல் காரணமாக அங்கீகாரம் நிலுவையில் உள்ள பள்ளி கள் போன்ற விபரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு