அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் விபரங்களைசேகரிக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இயக்குநர் பிச்சை, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்கக இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மெட்ரிக்குலேஷன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், குறைந்தபட்ச இடவசதி ஒரே அமைவிடத்தில் ஏற்படுத்தாத பள்ளிகள் சார்பில் இடவசதி சார்ந்த விதியை மாற்றியமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கீகாரமின்றி செயல் படும் பள்ளிகள் தொடர் பான விபரங்களை, அரசி டம் சமர்பிக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் தொடர்பான விபரங்களை படிவமாக வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.இந்த படிவத்தில் பள்ளியின் வகை, இன்றைய தேதி வரை அங்கீகாரம் பெற்ற மொத்த பள்ளிகள் எண்ணிக்கை, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எண்ணிக்கை, இடப்பற்றாக்குறை காரண மாக அங்கீகாரம் நிலுவை யில் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செயல்படுதல் காரணமாக அங்கீகாரம் நிலுவையில் உள்ள பள்ளி கள் போன்ற விபரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.