Skip to main content

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது


தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என,
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வட்டி வீதத்தை ஏற்க, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தயாராக இல்லை. இந்நிலையில், இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று நடைபெறும் தொழிலாளர் சேமநல நிதி மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், வட்டி வீதம் குறித்து முடிவெடுப்பதை, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டிற்கு தள்ளிப் போடலாம். கடந்த 2013 14ம் நிதியாண்டில், இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, 8.75 சதவீத வட்டியும், அதற்கு முந்தைய ஆண்டில், 8.5 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்