Skip to main content

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது


தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என,
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வட்டி வீதத்தை ஏற்க, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தயாராக இல்லை. இந்நிலையில், இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று நடைபெறும் தொழிலாளர் சேமநல நிதி மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், வட்டி வீதம் குறித்து முடிவெடுப்பதை, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டிற்கு தள்ளிப் போடலாம். கடந்த 2013 14ம் நிதியாண்டில், இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, 8.75 சதவீத வட்டியும், அதற்கு முந்தைய ஆண்டில், 8.5 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா