Skip to main content

சென்னையின் மீது தாக்குதல் நடத்திய எம்டன் கப்பல் நூற்றாண்டு சிறப்பு கண்காட்சி


எஸ்.எம்.எஸ். எம்டன் என்பது ஜெர்மனி கடற்படையின் கப்பல். முதல் உலகப் போரின் போது உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்கு அந்த கப்பலின் போரிடும் திறன் இருந்தது. கார்ல் வான் முல்லர் தலைமையில் இந்த எம்டன் கப்பல் அப்போதைய இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளான
மலேசியா, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்தியது.



1914 ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் இருந்து இந்த கப்பல், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தது. 1914 செப்டம்பர் 22ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கிய எம்டன் கப்பல், தனது பீரங்கி குண்டுகளை ஏவியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நின்றிருந்த இங்கிலாந்து கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மா ஷெல் ஆயில் டாங்குகள், சென்னை உயர் நீதி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றின் மீது விழுந்து வெடித்தன.

அதன் பிறகு மலேசியா கடல் எல்லை வழியாக சென்ற இந்த கப்பல் கடைசியாக ஆஸ்திரேலியாவில் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இந்த கப்பல் வந்து குண்டுவீசிய நூற்றாண்டை நினைவு கூறும் வகையில், ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் கண்காட்சி நடந்து வருகிறது.

இந்த கண்காட்சி நேற்று துவங்கி செப்டம்பர் 7ம் தேதி வரை நடக்கிறது. இதில், எம்டன் கப்பல், கேப்டன் கார்ல் முல்லர், எம்டன் கப்பலில் இருந்த ஜெர்மனி வீரர்கள் ஆகியோரின் படங்கள் உள்ளன. எம்டன் கப்பல் கடந்து வந்த நாடு, இறுதியாக கப்பல் தாக்கப்பட்டது ஆகியவற்றை தத்ரூபமாக விவரிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் அடங்கிய புகைப்படங்கள் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சி குறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஷான் கெல்லி கூறும் போது, �சென்னைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே எம்டன் கப்பல் மூலம் உள்ள வரலாற்று தொடர்பை இந்த கண்காட்சி பிரதிபலிக்கிறது.

முதலாம் உலகப் போரின் போது பல நாடுகளில் நுழைந்து தாக்குதல் நடத்தி விட்டு இந்த கப்பல் திரும்பியது. இந்த கப்பல் வந்து சென்ற நிகழ்ச்சி நடந்து நூறாண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவற்றை நினைவு கூறும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது� என்றார்.
ஆஸ்திரேலிய தூதரகம் ஏற்பாடு

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்