Skip to main content

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு



3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 பணியாளர்களுக்கும்,
வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ,
மாற்றுப் பணி வழங்க வேண்டும் என நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

பணி நியமனத்தின்போது, வயது வரம்பை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது என்றும், கல்வித் தகுதி அடிப்படையில், அரசுத் துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபருக்குள் பணி வழங்காவிட்டால், அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் வரை, பணி நீக்கம் செய்யப்பட்டபோது, பெற்ற சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011 ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க உத்தரவிட்டது. அதனை ஏற்க மறுத்த மக்கள் நலப் பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியபோது, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க ஆணையிட்டது. இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு