Skip to main content

'ஆசிரியர்கள் பணிப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா?



ஆசிரியர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு பணியில், சுணக்கம்நிலவி வருவதாக ஆய்வின் போது தெரிய வந்ததை தொடர்ந்து, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவற்றை கண்காணித்து விவரங்களை சரி செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள, ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பதிவேடுகளில், உரிய பதிவு முறையாக பதியப்படாமல் இருப்பதாக, துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறைகளை சரி செய்ய தொடக்க கல்வி இயக்குனரகம், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, பல்வேறு உத்தரவுகளைபிறப்பித்துள்ளது. அதன்படி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை, பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுப்பு விவரங்கள், சரியான முறையில் பதியப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பணிப்பதிவேட்டில், உயர்கல்வி விவரங்களை பதியப்படும் முன்பு, உயர்கல்வி பயில்வதற்கு துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா? சான்றிதழ் தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என சரிபார்க்க வேண்டும். இந்த பணிப்பதிவேடு பட்டியலின்படியே, முன்னுரிமை, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதில் தவறு இருந்தால், அதற்கு அந்த அலுவலரே பொறுப்பாவார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலமாக, வேறு ஒன்றியங்களுக்கு செல்ல நேர்ந்தால், அவர் பணியாற்றிய ஒன்றியத்தில் உள்ள, பணிப்பதிவேட்டில் அனைத்தையும் பதிவு செய்து விட்டு தான், செல்ல வேண்டும். இவற்றை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு