Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிர்வாகப் பணியிடங்கள்



நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கே.வி.எஸ்., என்ற சுருக்கமான பெயரால் பலராலும் அறியப்படுகின்றன. கல்வித் துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து வரும் இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள 669 நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிரின்சிபால் பிரிவில் 145 இடங்களும், டெக்னிகல் ஆபிசர் பிரிவில் 3ம், உதவியாளர் பிரிவில் 81ம், அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவில் 120ம், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவில் 284ம், இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவில் 7ம், கிரேடு 2 ஸ்டெனோகிராபர் பிரிவில் 29ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: பிரின்சிபால் பிரிவுக்கு 35 முதல் 50ம், டெக்னிகல் ஆபிசர் பிரிவுக்கு 35ம், அசிஸ்டென்ட் பிரிவுக்கு 35ம், அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு 30ம், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு 27ம், இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு 28ம், ஸ்டெனோகிராபர் பிரிவுக்கு 27ம் வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரின்சிபால் பதவிக்கு முது நிலைப் பட்டப் படிப்பு, டெக்னிகல் ஆபிசர் பிரிவுக்கு 6 வருட பணியனுபவத்துடன் பொறியியல் பட்டப் படிப்பு, அசிஸ்டென்ட் மற்றும் அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவுகளுக்கு பட்டப் படிப்பு, லோயர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பு, இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியுடன் முது நிலைப் பட்டப் படிப்பு, ஸ்டெனோகிராபர் பதவிக்கு சிறப்புத் தகுதியுடன் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பு தேவை.

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.09.2014

இணையதள முகவரி: http://kvsangathan.nic.in/, https://www.jobapply.in/kvs/.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா