Skip to main content

இ.பி.எப்., டிபாசிட்களுக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம்


''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி
டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில் (2014 15) வழங்கப்பட உள்ள வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் சேமநல நிதி சந்தாதாரர்களின் டிபாசிட்களுக்கு, கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த நிதியாண்டும், 8.75 சதவீத வட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சேமநல நிதி அமைப்பின், மத்திய ஆணையர் ஜலான் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ''வட்டி வீதம் குறித்த முறையான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம், பின் வெளியிடும்,'' என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு