Skip to main content

33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான்


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.


 மங்கள்யான்நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் மங்கள்யான் விண்கல திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது.ரூ.450 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. 
  
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம், எவ்வித பிரச்சினையும் இன்றி திட்டமிட்டபடி விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.189 மில்லியன் கி.மீ.விண்கலம் ஏவப்பட்டது முதல் ஒவ்வொரு நாளும் இந்தியர்களின் மனதில் ஆவலை அதிகரித்து வரும் மங்கள்யான், தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுமார் 9 மாதங்களில் 189 மில்லியன் கிலோ மீட்டர்களை வெற்றிகரமாக கடந்து விட்ட மங்கள்யான், இன்னும் 90 லட்சம் கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.

இந்த தூரத்தையும் இன்னும் 33 நாட்களில் கடந்து விடும் என இஸ்ரோ நேற்று அறிவித்து உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி செவ்வாய்கிரக சுற்று வட்டப்பாதையை மங்கள்யான் விண்கலம் சென்றடையும் என இஸ்ரோ அதிகாரிகள் சமூக வலைத்தளம் ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

விண்வெளி ஆய்வில் மைல்கல்இஸ்ரோவின் லட்சிய திட்டமான மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றால், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து விடும்.மேலும் இந்த திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு துறையில் மற்றொரு மைல்கல்லாகவும் விளங்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு