Skip to main content

ஆசிரியர் பல்கலையில் எம்பில் படிப்பில் சேர ஆக.25 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்பில் சேர விரும்புபவர்கள்விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முழுநேரம் மற்றும் பகுதி நேர கல்வியாக பல்வேறு பாடத்தலைப்புகளில் கற்றுத்தரப்படுகின்றன.
2014&15ம் கல்வி ஆண்டில் இப்பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில கடந்த 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 25ம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை பெற விரும்புவோர் பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்விபல்கலைக்கழகம், சென்னை 5 என்ற முகவரிக்கு விண்ணப்ப கட்டணத்தை டிடிஆக எடுத்து அனுப்ப வேண்டும்.பொதுப்பிரிவினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.250 கட்டணம் ஆகும். இவர்கள் ஜாதி சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும்25ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்கவேண்டும்.மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம்www.tnteu.inஎன்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு