Skip to main content

உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம்

அரசு இன்ஜி., கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம் - தினமலர்
அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள், ஆக.,20 முதல் செப்.,5 வரை அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் வினியோகிக்கப்பட உள்ளன. 
தமிழகத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இப் பணிக்கு 2013-14 ஆண்டு போட்டி எழுத்து தேர்விற்கான விண்ணப்ப படிவங்கள், ஆக.,20 காலை 10 மணி முதல் செப்.,5 மாலை 5 மணிவரை, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும்(சி.இ.ஓ.,) வினியோகம் செய்யப்படும் ஆசிரியர் தேர்வு

வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான கட்டணம் 100 ரூபாய். அதனுடன் தகவல் தொகுப்பேடு வழங்கப்படும். அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து ஸ்டேட் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சரியான தேர்வு கட்டணத்திற்கு 'டிடி' எடுத்து செப்.,5 மாலை 5 மணிக்குள் சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். தினசரி விற்பனை செய்யப்படும் விண்ணப்ப விபரத்தினை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மெயில் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தி செய்யப்பட்ட பாடவாரியான விண்ணப்ப விபரத்தினை, செப்.,8ல், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பணியாளர் மூலம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா