Skip to main content

உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம்

அரசு இன்ஜி., கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம் - தினமலர்
அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள், ஆக.,20 முதல் செப்.,5 வரை அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் வினியோகிக்கப்பட உள்ளன. 
தமிழகத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இப் பணிக்கு 2013-14 ஆண்டு போட்டி எழுத்து தேர்விற்கான விண்ணப்ப படிவங்கள், ஆக.,20 காலை 10 மணி முதல் செப்.,5 மாலை 5 மணிவரை, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும்(சி.இ.ஓ.,) வினியோகம் செய்யப்படும் ஆசிரியர் தேர்வு

வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான கட்டணம் 100 ரூபாய். அதனுடன் தகவல் தொகுப்பேடு வழங்கப்படும். அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து ஸ்டேட் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சரியான தேர்வு கட்டணத்திற்கு 'டிடி' எடுத்து செப்.,5 மாலை 5 மணிக்குள் சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். தினசரி விற்பனை செய்யப்படும் விண்ணப்ப விபரத்தினை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மெயில் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தி செய்யப்பட்ட பாடவாரியான விண்ணப்ப விபரத்தினை, செப்.,8ல், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பணியாளர் மூலம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு