Skip to main content

பார்வையற்ற மாணவர்கள் ஆக., 18க்குள் விண்ணப்பிக்கலாம்


"இடைநிலை கல்வித் திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் முற்றிலும் கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, தேசிய பார்வையற்றோர் மண்டல மையம் மூலம்
உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, பார்வையில்லா
மாணவர்கள் பற்றிய விபரத்தை ஆக., 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி

இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் பள்ளி சுகாதார துறையின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச

கண் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு கண்ணாடி வழங்கப்படும். பள்ளிகல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவில்," கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, சென்னை பூந்தமல்லி, தேசிய பார்வையற்றோர் மையம் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, பார்வையில்லாத மாணவர்கள் பற்றிய விபரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து, ஆக., 18ம் தேதிக்குள் தேசிய பார்வையற்றோர் மண்டல மையத்திற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான உபகரணங்கள், விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு