Skip to main content

மூன்றாண்டு முடிவதால் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்.


தமிழகத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆவதால், இந்த கல்விஆண்டில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்க கட்டண கமிட்டி முடிவு செய்துள்ளது. 
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் 2010ம் ஆண்டில் கட்டண குழுவை அரசு அமைத்தது. அதற்கு பிறகு இரண்டு முறை கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுமார் 800 பள்ளிகள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் விசாரணை தற்போது நடக்கிறது. இந்த ஆண்டு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 15 பள்ளிகள் மீது புகார் வந்தது. அதன்பேரில் 10 பள்ளிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. சென்னை பெரம்பூரை சேர்ந்த நிதியுதவி பெறும் பள்ளியில் ரூ.1 கோடியே 62 லட்சம் கூடுதலாக கட்டணம் பெற்றது நிரூபணம் ஆனதால், அந்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, 2015ம் ஆண்டுடன் கால அவகாசம் முடியும் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இது குறித்து கட்டண கமிட்டியின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது: ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் அந்த கட்டணத்தில் திருப்தி இல்லை என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அதில் 520 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. 

புதியதாக கண்டறியப்பட்டுள்ள 373 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு வரை முடிவடைந்த பள்ளிகள் அடுத்த 3 ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டி மனு செய்துள்ளன. கட்டணம் கமிட்டி தெரிவித்தபடி கல்விக் கட்டணம், போக்குவரத்து கட்டணம், நோட்டுப்புத்தகத்துக்கான கட்டணம், சீருடைக்கான கட்டணம் தவிர வேறு கட்டணம் எதையும் பள்ளிகள் வசூலிக்க கூடாது.அப்படி வசூலிக்கும் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் 5 பள்ளிகள்நிலுவையில் உள்ளன. தற்போது, சென்னையை அடுத்த ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் திரும்ப பெறும் டிபாசிட் என்று வசூலித்த பணத்தை கொடுக்க மறுப்பதாகபெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன் மீது விசாரணை நடத்தி க்ஷீ2 லட்சத்து 20 ஆயிரம் திரும்ப பெறப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு கட்டண கமிட்டி பரிந்துரை செய்யும். ஆனால், கட்டண கமிட்டியே நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம் அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.

சிக்கலில் கன்னியாகுமரி பள்ளிகள்

தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டண கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாதுஎன்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆனால் பல பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இது போல கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இதையடுத்து டாக்டர் ஒருவர், 13 பள்ளிகளில் நேரில் சென்று மாணவர் சேர்க்கைக்குஎவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.அந்த பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து விவரங்களையும் பென்-கேம் மூலம் படம் பிடித்து அதை ஒரு சிடியாக தயாரித்து கட்டண கமிட்டியிடம் கொடுத்துள்ளார். அதன் மீது சட்ட ரீதியான விசாரணையை கட்டண கமிட்டி தொடங்கியுள்ளது. இந்த விசாரணை தற்போது பரபரப்பாக நடக்கிறது. விசாரணை முடித்ததும் 13 பள்ளிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்க கமிட்டி முடிவு செய்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு