அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்வை நடத்துகிறது.
இது குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. ஆகஸ்ட், 11ம் தேதி
முதல், 26ம் தேதி வரை, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. போட்டி தேர்வு, சென்னையில் மட்டுமே நடக்கும் எனவும், தேர்வில், விண்ணப்பத்தாரர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு, இருவர் வீதம், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர் எனவும், டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.