தமிழகத்தில் உதவி பேராசியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தொடங்கி இண்டு கட்டங்களாக நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதற்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும். அனைவருக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதம்
அனுப்பப்படும். கடிதம் வரும் வரை காத்திருக்காமல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.nic.in) அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், அதில் குறிப்பிட்டிருக்கும் அட்டவணைப்படி நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.