Skip to main content

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (CTET) அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET) செப்டம்பர் 2014 நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.

மத்திய அரசு பள்ளிகள் தவிர தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் (CTET) தேர்வு பொருந்தும். CTET தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாகும்.




தாள்-I -ல் தகுதி பெறுபவர் 1 முதல் 5 வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.

தாள்-II -ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புபவர்கள் இருதாள்களிலும் தகுதி பெற வேண்டும்.




கல்வித்தகுதி: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் + 2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்களது கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்ற பின்னரே CTET தகுதி சான்றிதழ் செல்லுபடியாகும்.




தேர்வு கட்டணம்: தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்விற்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.

தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது செல்லானை பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயரில் CBSE Syndicate Bank அல்லது canara Bank ரொக்கமாக செலுத்தலாம்.




தேர்வு நடைபெறும் தேதி:

தாள் - II 21.09.2014 காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தாள் - I 21.09.2014 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவு எண் கொடுக்கப்படும். பதிவு எண்ணுடன் கூடிய ஆன்லைன் படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.




ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.08.2014

தேர்வுக்கான அனுமதி சீட்டை 22.08.2014 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்