Skip to main content

மாணவர்கள் சத்து மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்"

"மாணவர்கள் சத்து மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்"
 தமிழக அரசின் உத்தரவின் படி பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தவறாமல் மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும் என தஞ்சை
கலெக்டர் சுப்பையன் அறிவித்துள்ளார்.

தஞ்சை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 
இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கலெக்டர் சுப்பையன் பேசியதாவது, "இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகத்திறன் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் சீராகும், பசியின்மை விலகும். ஹீமோ குளோபின் அளவு சீராகும். இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும். குறைப் பிரசவம் மற்றும் பிரசவத்தின் போது உதிரபோக்கு ஏற்படுவதை தவிர்க்கலாம். கருவில் குழந்தையின் வளர்ச்சி சீராகும். தாய் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

எனவே 10 வயதுக்கு மேல் 19 வயதுகுட்பட்ட ஆண், பெண் இருதரப்பினரும் இரும்புச்சத்து மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பள்ளிகளில் வாரந்தோறும் வியாழக்கிழமை தோறும், மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும். வளர் இளம் பெண்கள் இரும்புசத்து மாத்திரைகள் உட்கொள்வது அவசியம் என்பதால் மதிய உணவுக்கு பின் இவற்றை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலமாக இரும்புசத்து மாத்திரைகள் வழங்கப்படவேண்டும்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ், மலர்கொடி, போத்திப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு