அமைச்சர் வீரமணி தகவல்:
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்
பற்றிய அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில்வெளியிடப்பட்டு விரைவில் புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.