Skip to main content

வெளிமாநில ஆசிரியர் டிப்ளமோ: மதிப்பீடு செய்யும் தடை நீக்கம்

வெளிமாநிலங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படித்தவர்களின் பட்டயச் சான்றிதழ்களை மதிப்பீடு செய்வதற்கான தடையை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடக்கக்
கல்வி ஆசிரியர் டிப்ளமோ பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2008-09-ஆம் கல்வியாண்டில் வெளிமாநிலங்களில் ஆசிரியர் டிப்ளமோ படித்தவர்களுக்கு பட்டயச் சான்று மதிப்பீடு செய்வது தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது தமிழகப் பாடத்திட்டதோடு ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலப் பாடத்திட்டங்களை ஒப்பீடு செய்ததில், அந்தப் பாடத்திட்டங்கள் தமிழகப் பாடத்திட்டத்துக்கு இணையானது என வல்லுநர் குழு பரிந்துரைத்தது.

அதனடிப்படையில், 2008-09-ஆம் கல்வியாண்டிலும், அதன்பிறகும் அந்த மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு, அவர்களின் டிப்ளமோ படிப்பு தமிழக படிப்புக்கு இணையானது என சான்றிதழ் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2008-09-ஆம் கல்வியாண்டிலோ அல்லது அதற்குப் பிறகோ ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் ஆசிரியர் டிப்ளமோ முடித்த மாணவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் தங்களது சான்றிதழ்களை மதிப்பீடு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு